shadow

இன்று இரவு மற்றும் நாளை சென்னை மக்கள் வெளியே வரவேண்டாம் என பேரிடர் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையை நோக்கி திரும்பி வந்து கொண்டிருக்கின்றது.

இதன் காரணமாக இன்று இரவு முதல் நாளை மறுநாள் காலை வரை சென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதனால் இன்று இரவு முதல் வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தெரிவித்துள்ளார்.மேலும் வீட்டில் உள்ளவர்கள் ஆதார் அட்டை, குடும்ப ரேஷன் அட்டை மற்றும் முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.