shadow

6a

 

மலேசியாவில் இருந்து கடந்த மாதம் 8ஆம் தேதி கிளம்பிய விமானம் MH370 அடையாள தெரியாத தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளது என்றும், அதில் பயணம் செய்த 239 பயணிகளும் உயிருடன் உள்ளார்கள் என்றும், அந்த விமானத்தை கடத்திய தீவிரவாத இயக்கத்தை கண்டுபிடித்துவிட்டோம் என்றும் ரஷ்ய செய்தி நிறுவனம் இன்று சற்றுமுன் தெரிவித்துள்ளது.

தற்போது MH370 ஆப்கானிஸ்தானிதால் இருக்கின்றது என்றும், பயணிகள் அனைவரும் ஏழு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் மண்குடிசைகளில் பலத்த பாதுகாப்புகளுடன் சிறை வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ள அந்த செய்தி நிறுவனம் கடத்தல்காரர்கள் சீனாவிடமும், அமெரிக்காவிடமும் பலமுறை தங்களுக்கு தேவையானதை பேரம் பேசி வந்துள்ளனர் என்றும், ஆனால் இந்த இருநாடுகளும் உண்மையை மறைத்து இதுவரை எந்த தகவல்களையும் வெளியிடாமல் உள்ளனர் என்றும் கூறியுள்ளது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து வெளிவரும் Moskovsky Komsomolets என்ற தினசரி நாளிதழ் வெளியிடும் செய்தி நிறுவனம்தான் இந்த தகவல்களை தங்கள் பத்திரிகைகளில் விரிவாக கூறியுள்ளது. 1919ஆம் ஆண்டுமுதல் இந்த தினசரி நாளிதழ் வெளிவருகின்றது. இந்த நிறுவனம் வெளியிடும் செய்தியில் உண்மைத்தன்மை இருக்கும் என ரஷ்யர்கள் கருதுகின்றனர்.

MH370 விமானத்தை கடத்திய தீவிரவாத கும்பலை தாங்கள் கண்டுபிடித்துவிட்டதாகவும், ரஷ்ய அரசும், மலேசிய அரசும் கேட்டுக்கொண்டால், அந்த தகவலை வெளியிட தயார் என்றும் அந்த செய்தி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் மலேசிய அரசு இந்த செய்தியை தாங்கள் நம்பவில்லை என்று கூறிவிட்டது.

Leave a Reply