திடீர் எச்சரிக்கையால் பரபரப்பு

சென்னை உள்பட 6 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் இன்று வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது என்பது தெரிந்ததே. பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ்க்கு மேலாக வெயில் அடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும் என்றும் அதனால் இந்த ஆறு மாவட்டங்களில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை இந்த ஆறு மாவட்ட பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இருந்தால் தவிர வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது

Leave a Reply