கொலராடோவை சேர்ந்த 22 வயதான மெர்ரிக் மேக்கோய் என்ற நபருக்கும் அவரது மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், அவர் ஒன்றரை வயது பெண் குழந்தையை மெர்ரிக்கிடம் விட்டுவிட்டு வீட்டைவிட்டே வெளியேறினார்.
இதனால் மனமுடைந்துப்போன மெர்ரிக், அவர் குழந்தையுடன் இருக்கும் படங்களை சமூக வலைதளமான பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார், பேஸ்புக்கில், அவரது மனைவிக்கு ஒரு செய்தி தெரிவித்திருந்தார். அதில், ‘நீ இல்லாமல் என்னால் வாழமுடியாது என நான் உன்னிடம் கூறியிருக்கிறேன்’ என குறிப்பிடபட்டிருந்தது.

இதற்கு பிறகு ஒன்றரை வயது குழந்தையுடன் தனியாக இருந்த மெரிக்கின் வீட்டில் இருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதனால் பதற்றம் அடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் விரைந்து வந்து பார்த்தப்போது, ரத்த வெள்ளத்தில் குழந்தை பலியாகி இருந்தது. குழந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நபர் தானும் சுட்டுக்கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துசென்ற போலீசார், அவரது நிலைமை குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இந்நிலையில், மெரிக்கின் மனைவி, மெரிக் அவரை கொலை செய்ய முயற்சித்ததால்தான் வீட்டைவிட்டு வெளியேறியதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply