shadow

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் ஜூன் 25 அன்று காலமானார். நடிகையின் கணவர் கடுமையான நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

வித்யாசாகரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, ரஜினிகாந்த், சரத் குமார், குஷ்பு சுந்தர், வெங்கடேஷ் டக்குபதி, சினேகா, பிரபுதேவா உள்ளிட்ட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்ததோடு, மீனாவின் இல்லத்துக்கும் சென்றனர்.

நடிகை இப்போது, ​​ஜூலை 13 அன்று, தனது மறைந்த கணவரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். அதற்கு தலைப்பிட்டு அவர் எழுதினார், “நீங்கள் எங்களின் அழகான ஆசீர்வாதம் ஆனால் மிக விரைவில் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டீர்கள். எங்கள் (என்) இதயங்களில் என்றென்றும். அன்பு மற்றும் பிரார்த்தனைகளை அனுப்பியதற்காக உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நல்ல இதயங்களுக்கு நானும் எனது குடும்பத்தினரும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

எங்களுக்கு அவர்கள் கண்டிப்பாக தேவை. அன்புடனும் அக்கறையுடனும் ஆதரவுடனும் எங்களைப் பொழியும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைக் கொண்டிருப்பதற்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் அன்பை உணர்கிறோம்.” என்று அதில் பதிவிட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, மீனா தனது கணவரின் இழப்பால் வருத்தப்படுவதாகவும், தனது தனியுரிமைக்கு மதிப்பளித்து அனுதாபப்படுமாறு ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். தனது கணவரின் மறைவு தொடர்பான பொய்யான தகவல்களை இனி ஒளிபரப்ப வேண்டாம் என்றும், கடினமான காலங்களில் தனக்காக உதவியவர்களுக்கும் பிரார்த்தனை செய்தவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அதில் கூறிப்பிட்டுளார்.