shadow

0bbe02d1-eee7-4f6a-b241-1184f2d68b0a_S_secvpf

* கற்பூர வாழை கண்ணிற்கு குளிர்ச்சி தரும்.

* செவ்வாழை கல்லீரல் வீக்கம், சிறுநீர் வியாதிகளை குணமாக்கும்.

* பச்சை வாழைப்பழம் குளிர்ச்சியைக் கொடுக்கும்.

* ரஸ்தாளி வாழை கண்ணிற்கும், உடல் வலுவிற்கும் நல்லது. பேயன் வாழைப்பழம் வெப்பத்தைக் குறைக்கும்.

* நேந்திரம் பழம் இரும்புச் சத்தினை கொடுக்கும்.

* பப்பாளிப் பழம் மூல வியாதிக்காரர்களுக்கு நல்லது.

* மாம்பழம் ரத்த அழுத்தத்தை சீராக்கும்.

* ஆப்பிள் மலச்சிக்கலைப் போக்கும்.

* திராட்சை இரத்த அழுத்தத்திற்கு நல்லது. ஈரல் சம்பந்தமான நோய் குணமாகும்.

* எலுமிச்சைப் பழம் உடல் சோர்வையும், மலச்சிக்கலையும்போக்கும்.

* செர்ரி பழம் கருப்பை வியாதிகளுக்கு நல்லது.

* மாதுளம் பழச்சாற்றில் பால் சேர்த்து சாப்பிட இரும்புச் சத்து கிடைக்கும். குடல் புழுக்கள் அழியும்.

* அன்னாசிப் பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

* நாவல் பழம் நீரிழிவைக் கட்டுப்படுத்தும்.

* சாத்துக்குடி இரத்த அழுத்தத்திற்கு நல்லது.

* கமலாப்பழம் உடல் உஷ்ணத்தையும், பித்தக் கோளாறுகளையும் நீக்கும்.

* கொய்யாப்பழம் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்லது. கல்லீரல் பலப்படும்.

* கோவைப்பழம் சாப்பிட்டால் பல்வலிகுணமாகும்.

* அத்திப்பழம் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

Leave a Reply