shadow

திரிபுரா முதல்வரின் அடுத்த சர்ச்சை கருத்து

சமீபத்தில் உலக அழகி டயானா ஹைடன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறி பின்னர் அதற்காக மன்னிப்பு கேட்ட திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப், தற்போது மெக்கானிக்கல் இன்ஜினியர்கள் குறித்தும் ஒரு சர்ச்சைக்கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது மெகானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்கள் சிவில் சர்வீஸ் பணியில் சேர வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஆர்ட்ஸ் மாணவர்கள் குடிமைப் பணியாளர்கள் பணியை தேர்வு செய்தனர். அதன்பின்னர், டாக்டர்கள், இன்ஜினியர்கள் ஆகியோர் சிவில் சர்வீஸ் பணிகளை தேர்வு செய்ய துவங்கிவிட்டனர்.

தற்போதையை நிலையில், சிவில் என்ஜினியர்கள் மட்டுமே சிவில் சர்வீஸ் பணியை தேர்வுசெய்ய வேண்டும், சிவில் சர்வீஸ் பணியை பொறுத்தவரை சமூகத்தை கட்டமைக்க நிர்வாகத் திறன் மிகவும் அவசியம், சிவில் இன்ஜினியர்களுக்கு அந்த திறன் அதிகம் உள்ளது.

அதேவேளையில், மெக்கானிக்கல் இன்ஜினியர்கள் படித்தவர்கள் சிவில் சர்வீஸ் பணிகளை தேர்வு செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply