shadow

தமிழகம் முழுவதும் 7 மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர் என்பதை சற்றுமுன் பார்த்தோம்.

அந்த மாவட்டங்கள் கடலூர் , புதுக்கோட்டை, திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

அதேபோல் தொடர் மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என ஆட்சியர் அறிவிப்பு