இன்று ரேசன் பொருட்களுக்கான டோக்கன் கிடையாது: தமிழக அரசு அறிவிப்பு
மே மாதம் வழங்கவிருக்கும் ரேசன் பொருட்களுக்கான டோக்கன் இன்று முதல் வீடு வீடாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக மே 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் டோக்கன்கள் வழங்கப்படும் எனவும் மே 4 முதல் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை ரேஷன் கடைகளில் இலவசமாக பெற்று கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 4 முதல் டோக்கன்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம்பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும் எனவும் இந்த பொருட்களை ரேஷன் கடையில் வாங்க வரும் அட்டைதாரர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ரேஷன் டோக்கன் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றம் என்றாலும் வரும் மே 2 முதல் டோக்கன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.