ஆர்வக்கோளாறில் பட்டாசு வெடித்த மக்கள்: திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதை நிரூபிக்கும் வகையில் 9 நிமிடங்கள் விளக்கேற்றுங்கள் என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றினர். இந்த நிலையில் ஒரு சிலர் ஆர்வக்கோளாறில் பட்டாசு வெடித்தனர் இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு வீட்டில் மாடியில் பட்டாசு வெடித்தபோது திடீரென அந்த வீட்டில் தீப்பிடித்தது இதனை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இருப்பினும் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றும் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Massive fire in a building in Jaipur from bursting crackers for #9baje9mintues. Hope everyone's safe. pic.twitter.com/peYW3J1Dza
— 🇮🇳 Danish Ateeq Khan 🇮🇳 (@danish_ateeq) April 5, 2020
Leave a Reply
You must be logged in to post a comment.