பிரதமர் மோடியுடன் தமிழக தங்கமகன் மாரியப்பன் சந்திப்பு
பாராஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்த மாரியப்பன் தங்கவேலு நேற்று டெல்லி திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டதை அடுத்து நேற்று மாலை பிரதமர் மோடியை அவர் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
’’தங்கள் அயராத உழைப்பால் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீரர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்’’ என இந்த சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதல் போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி புதிய வரலாறு படைத்து தங்கப் பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் இந்தியா இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்துடன் 43வது இடத்தைப் பிடித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.