shadow

மெரீனா தடை உத்தரவு வாபஸ். பொதுமக்கள் நிம்மதி

சென்னை மெரீனாவில் கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை கடந்த 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி காவல்துறையினர் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் இந்த தடை உத்தரவு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

மெரீனாவில் தற்போது சுமூகமான சூழ்நிலை தெரிவதாகவும், தற்போது நிலவி வரும் அமைதியான சூழ்நிலையை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டதாகவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

தற்போது தீவுத்திடலில் அரசு பொருட்காட்சியும் நடந்து வருவதால் த்டை உத்தரவு காரணமாக பொதுமக்கள் இந்த பகுதிக்கு வர தயங்கிய நிலையில் இந்த தடை உத்தரவு விலக்கப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply