பரிதாப மரணம்
உத்தரப்பிரதேச மாநிலம் பெமேதரா பகுதியை சேர்ந்த கிருஷ்ணா சகு என்பவர் தனது மனைவி பிரமிளா மகன் மற்றும் மகளுடன் வெளி மாநிலத்தில் இருந்து சொந்த ஊர் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் பரிதாபமாக பலியானார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கிருஷ்ணா ஊரடங்கு காரணமாக தனது குடும்பத்துடன் சொந்த ஊர் செல்ல முடிவு செய்தார். பேருந்து, ரயில் இல்லாததால் தனது சைக்கிளேலேயே மனைவி மற்றும் மகன், மகளுடன் கிளம்பியுள்ளார்.
இவர்கள் சைக்கிளில் லக்னோ அருகே வந்த போது அவரது சைக்கிள் மீது வாகனம் ஒன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் கிருஷ்ணாவும் அவரது மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு குழந்தைகளும் காயங்களுடன் உயிர் தப்பினர்.
சொந்த ஊர் சென்று விவசாயம் செய்தாவது பிழைத்து கொள்ளலாம் என்று முடிவு செய்து சென்ற கிருஷ்ணா, மனைவியுடன் பரிதாபமாக மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.