shadow

கலியுகத்தின் ஏகலைவன். சோனியாவுக்காக சுண்டுவிரலை வெட்டிய காங்கிரஸ் தொண்டர்.
finger
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் துணைத்தலைவர் ராகுலுக்கு ஜாமின் கிடைத்துள்ளதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் தனது சுண்டுவிரலை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இந்து வாலு சுரேஷ் என்பவர்  நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் துணைத்தலைவர் ராகுலுக்கு ஜாமின் கிடைத்தால் திருப்பதி கோவிலுக்கு தனது சுண்டுவிரலை காணிக்கையாக செலுத்துவதாக நேர்த்திக்கடன் செய்திருந்தாராம்.

இந்நிலையில் கடந்த மாதம் சோனியா மற்றும் ராகுலுக்கு ஜாமீன் கிடைத்ததை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தனது நண்பருடன் சென்று விரலை வெட்டி அதை ரூ.1000 நோட்டில் வைத்து திருப்பதி உண்டியலில் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கருத்து கூறிய அமைச்சர் எம்.எச். அம்பரீஷ், தனது இல்லத்திற்கு வாலு சுரேஷை வரவழைத்து ‘நீங்கள்தான் கலியுகத்தின் ஏகவலைவன் என்றும் இருப்பினும் வலியோடு கூடிய வேண்டுதலை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

 

Leave a Reply