shadow

சச்சின் மகள் சாராவை கடத்த போவதாக மிரட்டிய வாலிபர் கைது

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவை தொலைபேசியில் கடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த் இளைஞர் ஒருவரை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.

சச்சின் டெண்டுல்கரின் 20 வயது மகள் சாரா. இவர் தனது தனது தந்தையுடன் அடிக்கடி கிரிக்கெட் போட்டிகளை பார்த்து வருகிறார். அப்போது தொலைக்காட்சியில் இவரை பார்த்து இவரது அழகில் மயங்கிய ஒரு வாலிபர், அவரை தொலைபேசி மூலம் 20 முறை தொடர்பு கொண்டு தனது காதலை தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் சாராவிடம் ஆபாசமாக பேசியதாகவும், தனது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவரை கடத்தப் போவதாகவும் சாராவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சச்சின் குடும்பத்தினர் மும்பையின் பந்த்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்தகாவல்துறையினர், தொலைப்பேசியில் பேசியவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தேவ்குமார் மைதி என்பதை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து மும்பை மற்றும் மேற்கு வங்க மாநில காவல்துறையினர் இணைந்து, கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் தேவ்குமார் மைதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் மனநிலை சரியில்லாதவர் என்று தெரிவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply