விளக்கை அணைக்க சொன்ன பிரதமரின் கருத்துக்கு மம்தா பானர்ஜியின் விமர்சனம்
வரும் 5ஆம் தேதி நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள விளக்கை அணைத்துவிட்டு அகல்விளக்கு ஏற்ற வேண்டும் என்று நேற்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்த கருத்து பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘பிரதமரின் விளக்கு விவகாரத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும். இதை வைத்து நான் ஏன் அரசியல் செய்ய வேண்டும். இதை ஏன் நீங்கள் அரசியலாக்க முயற்சிக்கிறீர்கள். தயவுசெய்து அதை செய்ய வேண்டாம் என்று கூறினார்.
முன்னதாக கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சியினர்களும் பிரதமரின் கருத்தை விமர்சனம் செய்த நிலையில் மம்தா பானர்ஜி மட்டுமே இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,
Leave a Reply
You must be logged in to post a comment.