shadow

பாஜகவின் அழிவு ஆரம்பமாகி விட்டது. இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து மம்தா பானர்ஜி

நேற்று வெளியான இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு எதிராக உள்ள நிலையில் காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் பாஜகவின் பின்னடவை உறுதி செய்தனர். இந்த நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கூறுகையில், ‘ பாஜகவின் அழிவு ஆரம்பமாகி விட்டதை இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாக உள்ளது என தெரிவித்துள்ளார்

மேலும் இடைத்தேர்தல் முடிவுகள் அனைத்து கட்சிகளுக்கும் தக்க பாடத்தை கற்றுத் தந்துள்ளது. இதில் மாநில கட்சிகள் தான் அதிகம் வெற்றி பெற்றுள்ளன. எனவே மாநில கட்சிகள் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம். அதற்கான வேலைகளை தொடங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன் மாநில கட்சிகள் ஒருங்கிணந்தால் மாநில கட்சிகள் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது என்றூம் இந்த தேர்தலை உதாரணமாகவும் வெற்றிக்கான பார்முலா வைத்து பாஜகவை தேசிய அளவில் தோற்கடிக்க வேண்டும் என்றும் மம்தா கூறியுள்ளார்.

Leave a Reply