வைரலாகும் புகைப்படம்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆம்பன் புயல் மேற்குவங்க மாநிலத்தை புரட்டிப் போட்ட நிலையில் அம்மாநிலத்தில் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்ட இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மேற்கு வங்கத்திற்கு வந்தார்
அவர் விமானத்தில் இருந்து இறங்கிய போது மேற்கு வங்க கவர்னர் அவரை வரவேற்றார். ஆனால் அங்கு நின்றிருந்த முதல்வர் மம்தா பானர்ஜியோ ஒரு பேப்பரை தீவிரமாக படித்துக்கொண்டு பிரதமரை கவனிக்காமல் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் வைரலாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
நாட்டின் பிரதமர் தனது மாநிலத்துக்கு வரும்போது அவரை வரவேற்காமல் ஏதோ பேப்பரை முதல்வர் மம்தா பானர்ஜி படித்து கொண்டு இருப்பது, அவர் வேண்டுமென்றே பிரதமரை அவமரியாதை செய்தது போல் இருப்பதாக பலர் கருத்து கூறி வருகின்றனர்
இருப்பினும் பிரதமரை கண்டாலே நடுங்கும் ஒருசில முதல்வர்கள் வரிசையில், மம்தா போல்டாக இருப்பது பாராட்டுக்குரியது என்றும் சில நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.