நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மம்தா பானர்ஜி திடீரென கீழே விழுந்ததால் காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
நேற்று மம்தா பானர்ஜி தான் போட்டியிடும் நந்திகிராம் என்ற தொகுதியில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார், அப்போது அவர் காரில் ஏறிய போது திடீரென நான்கைந்து பேர் அவரை தள்ளி விட்டதாகவும் இதனால் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
இதனையடுத்து தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தன்னை சிலர் தாக்கியதாகவும் காவல்துறை தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.