பாரதிய ஜனதா கட்சியுடனும், பிரதமர் நரேந்திர மோடியுடனும் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று டெல்லியில் திடீரென அத்வானி வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஜவஹர்லால் நேருவின் 125-வது பிறந்தநாளையொட்டி சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள டெல்லி சென்ற மம்தா பானர்ஜி, பாரதிய .ஜனதா கட்சியின் மூத்த தலைவரான அத்வானியின் வீட்டிற்குச் சென்றார். அத்வானியின் மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் அவரை நலம் விசாரிக்கவே மம்தா பானர்ஜி அத்வானியின் வீட்டிற்கு சென்றதாகவும் முதல்வர் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அரசியல் களத்தில் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டாலும், முக்கியமான தருணங்களில் தலைவர்கள் சந்தித்து நலம் விசாரிப்பது வட இந்திய அரசியலில் வழக்கம் என்பது அனைவரும் அறிந்ததே.
Leave a Reply
You must be logged in to post a comment.