மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக வங்கதேச நாட்டிற்கு இன்று முதல் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். அவருடன் மேற்கு வங்க ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பிர்ஹத ஹக்கீம், சுற்றுலாதுறை அமைச்சர் பிரட்யா பாசு மற்றும் தலைமைச்செயலாளர் சஞ்சய் மித்ரா ஆகியோர்களும் செல்கின்றனர்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மற்றும் அதிபர் முகம்மது அப்துல் ஹமீது ஆகியோர்களை மம்தா பானர்ஜி சந்தித்து பேசுவார் என தகவல்கள் கூறுகின்றன. மேலும் வங்கதேசத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ள பாஷா திவாஸ்’ என்ற நிகழ்ச்சியிலும் மம்தா கலந்து கொள்வாரென தெரிகிறது.
மேற்குவங்க மாநிலமும், வங்கதேச நாடும் கலாச்சாரத்தில் ஒற்றுமையுள்ள பிரதேசம் என்றும், உணவு மற்றும் பழக்கவழக்கங்கள் ஆகியவை இரண்டு பிரதேச மக்களிடமும் ஒற்றுமையாக காணப்படும் என்றும் கூறிய மம்தா, வங்கதேச நாட்டுடன் இணக்கமான சூழ்நிலையுடன் இருக்கவே மேற்குவங்கம் விரும்புவதாகவும் மம்தா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.