பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 12000 ஆண்டுகள் தண்டனை ஏன் தெரியுமா?
பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு பொதுவாக 4 முதல் 8 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை உலகம் முழுவதும் வழங்கப்பட்டு வரும் நிலையில் மலேசியாவை சேர்ந்த பாலியல் குற்றவாளி ஒருவருக்கு 12000 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
36 வயது பாலியல் குற்றவாளியான இந்த நபர் தனது சொந்த மகளையே சுமார் 7 மாதங்கள் தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும், இவர் மீது 626 குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 12000 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து தீர்ப்பு வழங்கும்படி இந்த குற்றவாளியிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.