மகாராஷ்டிரா கலவரம் குஜராத்திலும் பரவியதால் பரபரப்பு
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக நீடித்த , பீமா கோரேகான் தலித்துகளுக்கும் மற்றொரு சாதியினருக்கும் இடையிலான கலவரம், அண்டை மாநிலமான குஜராத்திற்கும் பரவியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்றிரவு குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் நகரில் உள்ள டோராஜி பகுதியில் வன்முறையாளர்கள் வாகனங்களுக்குத் தீ வைத்து கடைகளை அடித்துநொறுக்கினர்.
அங்கிருந்த அரசுப் பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதால் அப்பேருந்து முழுவதும் தீயில் கருகி சாம்பலானது. பயணிகளை இறக்கி விட்டு தீ வைத்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்
Leave a Reply
You must be logged in to post a comment.