shadow

மகாராஷ்டிரா முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய முதல்வர்

மகாராஷ்டிர மாநில முதல்வர் பட்நாவீஸ் அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் லத்தூர் என்ற இடத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் அவசரமாக தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முதல்வர் மற்றும் அவருடன் சென்றிருந்த அதிகாரிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த விபத்து குறித்து முதல்வர் பட்நாவீஸ் தனது டுவிட்டரில் கூறியதாவது: லத்தூரில் நாங்கள் சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது விபத்திற்குள்ளானது. நானும் எனது குழுவினரும் பத்திரமாக உள்ளோம். பயப்பட தேவையில்லை’ என்று கூறியுள்ளார்

இந்த விபத்து குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ஹெலிகாப்டரில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறே இந்த விபத்திற்கு காரணம் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply