shadow

மகதாயி நதிநீர் பங்கீட்டு விவகாரம்: இன்று கர்நாடகத்தில் பந்த்

மகதாயி நதிநீர் பங்கீட்டு விவகாரம் குறித்து கர்நாடக மாநிலத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டம் காரணமாக இன்று தமிழக அரசுப் பேருந்துகள் ஓசூர் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகா, தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை நிலவி வரும் நிலையில் கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் பாயும் மகதாயி நதி நீர் பங்கீடு குறித்து 3 மாநிலங்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது

இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிடக் கோரி, கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் பல இடங்களில் வன்முறையும் வெடித்தது. இந்த நிலையில் இன்று கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த முழு அடைப்பு காரணமாக இன்று கர்நாடகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply