shadow

முன்பதிவில்லா பொதுப் பெட்டிகளைக் கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள்: தெற்கு ரயில்வே

தமிழகத்தில் 5 முன்பதிவில்லா பொதுப் பெட்டிகளைக் கொண்ட விரைவு வண்டிகளை இயக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதை வரவேற்கிறேன் என மதுரை எம்பி வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

தெற்கு ரயில்வேயில் முன்பு ஓடிக்கொண்டிருந்த சாதாரண பயணி வண்டிகளை இயக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறேன்.

இப்போது மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட புனலூர்- கொல்லம் ;மதுரை- இராமேஸ்வரம்; திருச்செந்தூர்- திருநெல்வேலி; செங்கோட்டை- திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே முன்பதிவில்லா பொது பெட்டிகளைக் கொண்ட விரைவு ரயில் 30 .5 .2022 முதல் இயக்கிட தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது. அதற்கான உத்தரவு 17 .5 .22 வெளியிடப்பட்டுள்ளது .

அத்துடன் கோயமுத்தூர்- மேட்டுப்பாளையம் இடையே 23. 5 .2022 முதல் விரைவு வண்டி பொது பெட்டிகளுடன் இயக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது .இதுவும் வரவேற்கத்தக்கதே. இது பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் முகமாக அமைந்துள்ளது.

எனினும் சாதாரண கட்டணத்தில் வண்டிகைகள் இயக்கப்பட வேண்டும் என்ற எனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்.