shadow

புளூவேல் விளையாட்டு: மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவர் தற்கொலை

உலகம் முழுவதும் இளைஞர்களை அடிமைப்படுத்தி தற்கொலை வரை செல்ல வைத்து அச்சுறுத்தி வரும் புளூவேல் ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வலியுறுத்தி வரும் நிலையில் இன்று மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

ஆன்லைன் மூலம் விளையாடும் புளூவேல் விளையாட்டில் கொடூரமான டாஸ்க்க்குகள் கொடுக்கப்பட்டு கடைசி டாஸ்க்கில் உயிரை மாய்த்து கொள்ளும் தற்கொலை டாஸ்க்குகள் கொடுக்கப்படுகிறது

இந்த விளையாட்டில் அடிமையாகி இருக்கும் பல இளைஞர்கள் 50வது டாஸ்க் வரை சென்று தற்கொலையும் செய்து கொள்கின்றனர். இந்த நிலையில் மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர், ப்ளூ வேல் கேம் விளையாடி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

அவரது வலது கையில் திமிங்கலத்தின் படத்தை வரைந்துள்ளார். நோட்டு புத்தகங்களிலும் திமிங்கலத்தின் படத்தை வரைந்து, ’இது விளையாட்டல்ல. விபரீதம். உள்ளே சென்றால், வெளியே வர முடியாது’ என்று எழுதி வைத்திருந்தாராம். இந்த தற்கொலை தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply