மத்திய பிரதேச மாநிலத்திலும் அம்மா உணவகம். முதல்வர் நவீன் பட்நாயக் முடிவு
தமிழக முதல்வரின் ‘அம்மா உணவகம்’ சென்னை உள்பட முக்கிய நகரங்களில் பெரும் ஆதரவுடன் இயங்கி வருகிறது. வெளியூர்களில் இருந்து சென்னையில் தங்கி வேலை செய்பவர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.30க்குள் தங்கள் உணவு செலவை முடித்துவிடும் வகையில் அம்மா உணவகம் கைகொடுத்து வருகிறது.
ஏற்கனவே அம்மா உணவகம் போன்று ஆந்திராவில் தொடங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மத்திய பிரதேச மாநிலத்டிலும் விரைவில் அம்மா உணவகம் போன்றே மலிவு விலை உணவகத்தை திறக்க அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் திட்டமிட்டுள்ளார்.
இதன்படி மத்தியப் பிரதேசத்தில் ஒரு முழு உணவை தாளி என்று கூறுவார்கள். அந்த வகையில் ஒரு ரொட்டி, பருப்பு, காய், சாதம், ஊறுகாய் அடங்கிய ஒரு தாளி ரூ.10க்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.