ஸ்ரீதேவி விட்ட இடத்தை நிரப்ப மாதுரி தீட்சித் முடிவு
பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் எதிர்பாராத வகையில் துபாயில் உள்ள ஓட்டல் ஒன்றில் குளியல் தொட்டியில் விழுந்து திடீரென மரணம் அடைந்த துயரமான சம்பவம் இந்திய திரையுலகையே அதிர்ச்சி அடைய செய்தது. அவரது இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு இறுதியஞ்சலி செலுத்தினர்
இந்த நிலையில் ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோது நடித்த ஒரு படத்தை முடிக்க ஆந்த படத்தின் இயக்குனர் அபிஷேக் வர்மா தீவிர ஆலோசனை செய்து வந்தார். அவரது கேரக்டரில் அவரது மகள் நடிக்கவும் வாய்ப்பு இல்லாமல் இருந்ததை அடுத்து ஸ்ரீதேவிக்கு இணையான நடிகைகளில் ஒருவரான நடிகை மாதுரி தீட்சித்தை அவர் அணுகியதாகவும், அவரும் ஸ்ரீதேவி விட்டு போன கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை கேள்விப்பட்ட ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர், மாதுரி தீட்சித்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜான்வி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அபிஷேக் வர்மா தற்போது இயக்கிவரும் படம் என் அம்மாவின் இதயத்துக்கு நெருக்கமானது. இந்த அழகான படத்தில் மாதுரிஜி பங்கேற்றுள்ளமைக்காக அப்பா, குஷி, நான் ஆகிய மூவருமே நன்றியுள்ளவர்களாக இருப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.