shadow

சிறை நிரப்பும் போராட்டம்: முதல்வருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழகத்தில் கடந்த 20ஆம் தேதி பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இந்த கட்டண உயர்வுக்கு முதலில் மேம்போக்காக கண்டனம் தெரிவித்த திமுக உள்பட பிற அரசியல் கட்சிகள் தற்போது மாணவர்கள் களமிறங்கி போராட்டத்தை தீவிரப்படுத்தியவுடன் மீண்டும் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்

20ஆம் தேதி உயர்த்தப்பட்ட பஸ் கட்டண உயர்வுக்கு 27ஆம் தேதி போராட்டத்தை அறிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின். மேலும் இந்த போராட்டத்தினால் பயன் இல்லை என்றால் அடுத்தகட்டமாக ஜனவரி 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறை நிரப்பும் போராட்டத்தை திமுக நடத்தும் என முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

பேருந்து கட்டண உயர்வுக்கு உண்மையிலேயே கண்டனம் தெரிவிப்பதாக இருந்தால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே நாளில் போராட்டம் நடத்தி அரசை ஸ்தம்பிக்க வைத்திருக்கலாம் என்றும் ஆனால் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு நாள் போராட்டத்தை நடத்துவதால் இந்த போராட்டங்கள் பிசுபிசுத்து போய்விட வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply