shadow

வேட்டியை விட்டுவிட்டு பேண்ட்டுக்கு மாறியது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்
mks 1
திருவண்ணாமலை  அருணை பொறியியல் கல்லூரியில் மாணவர்களிடையே கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்றில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தனது கல்லூரி கால அனுபவங்களை மாணவர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதன் தொகுப்பு இதோ: ”பல ஊர்களில் இருந்து மாணவர்கள் வந்திருக்கிறீர்கள். உங்களை பார்த்து பொறாமைப்பட்டதால் நான் வேட்டி சட்டையை விடுத்து பேண்ட் சட்டையில் வந்துவிட்டேன். என்னுடைய கல்லூரி வாழ்க்கையில் நான் வகுப்புகளை, கட்டடித்துவிட்டு எம்.ஜி.ஆர். படங்களுக்கு போனதுண்டு. கல்லூரி காலங்களில் நான் பல நிகழ்ச்சிகளை நடத்தியதுண்டு. அப்போது பல அரசியல் நிகழ்வுகள் குறித்து விவாதித்ததுண்டு. பேராசிரியர்களிடம் வம்பு பண்ணிய நாட்கள், எனக்கு நினைவுக்கு வருகிறது.

mksபேராசிரியர்களை போல வறுத்தெடுக்க விரும்பவில்லை. பெரும்பாலான இளைஞர்கள் அரசியலை விட்டு தள்ளியே இருக்கிறீர்கள். உங்களுக்கும் அரசியலுக்குமான இடைவெளியை குறைக்க வேண்டும். புதுயுகச் சிற்பிகளான நீங்களும், அரசியலில் பங்கெடுக்க வேண்டும். அதற்கான வாய்ப்பாக உங்கள் யோசனைகளை கேட்டேன். விவசாயம், சுகாதாரம், தண்ணீர் பற்றாக்குறை, தொழில் முனைவோர்களை உருவாக்குதல் என்று இங்கே மாணவர்கள் பல விஷயங்களை பேசினார்கள்.

வேலைவாய்ப்பை உருவாக்கும் மாநிலமாக தமிழகம் இல்லாமல் வேலை தேடிப்போகும் மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. இந்த நிலை தமிழகத்தில் நிலவக் கூடாது. இவைகளை நிறைவேற்ற துடிப்பு மிக்க இளைஞர்களான உங்கள் கையில் தான் உள்ளது. வேலை வாய்ப்பு பதிவை 21 ஆம்  நூற்றாண்டுக்கு ஏற்றது போல் மாற்றி அமைக்க வேண்டும்.

மின்வெட்டு போன்ற பல பிரச்னையால் தமிழ்நாட்டில் பல தொழில்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தொழில்களுக்கு புத்துயிரூட்டி உலக அளவில் போட்டியிடக் கூடியவையாக மாற்ற வேண்டும். சுயதொழில் தொடங்க ஊக்கம் அளிக்கப்பட வேண்டியது அவசியம். தொழில் முனைவோருக்கு முதலீடு எளிதாக கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.

ஆராய்சிக்கு என்று இந்தியாவில் செலவிடும் தொகை மிகமிகக் குறைவாக உள்ளது. பேஸ்புக், கூகுள், விப்ரோ, இன்போசிஸ் போன்றவை தமிழகத்தில் இருந்து உருவாக்கபட வேண்டும். வித்தியாசமாக சிந்திக்கும் ஆற்றலை பெறுங்கள். சவாலை சந்தியுங்கள் புதுயுகமாக சிந்தியுங்கள்” என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறி உற்சாகமூட்டினார்

Leave a Reply