shadow

முதல்வர் ஓபிஎஸ்.-மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு ஏன்?

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் ராஜினாமா செய்ய உள்ளதாகவும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வர் பதவியில் அமர்வதற்காக அவர் விட்டு கொடுக்க உள்ளதாகவும் அதிமுக வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து பேசினார். தமிழகத்தில் பல திட்டங்களை நிறைவேற்றுவது குறித்தும், அதில் மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுதல் குறித்தும் இந்த சந்திப்பில் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் வரும் 5ஆம் தேதி எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்திக்க உள்ளார். விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து மு.க.ஸ்டாலின், முதல்வருடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply