என்ன ஆச்சு இந்த டிசம்பருக்கு? கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவு, அவருடைய அரசியல் குருவாக இருந்த சோ ராமசாமியின் மறைவு ஆகியவற்றால் தமிழகமே துயரத்தில் உள்ள நிலையில் சற்று முன் கவியரசு வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கவியரசர் வைரமுத்துவுக்கு மாரடைப்பு என வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தாலும் அவருடைய மகனும் பாடலாசிரியருமான மதன்கார்க்கி ‘வைரமுத்து ஆண்டுதோறும் எடுக்கும் மருத்துவ சோதனைகளுக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
எம்.ஜி.ஆர் மறைவு, சுனாமி, பெருவெள்ளம், ஜெயலலிதா, சோ மறைவு ஆகியவை அனைத்துமே டிசம்பரில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.