பிரான்ஸ் ரெய்டு. லைகா நிறுவனம் மறுப்பு
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘2.0’ படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருக்கு சொந்தமான லைகா மொபைல் நிறுவனத்தின் பிரான்ஸ் நாட்டு கிளையில் சமீபத்தில் காவல்துறையினர் ரெய்டு நடத்தி வரி ஏய்ப்பு நடந்ததி கண்டுபிடித்ததாகவும் இதுகுறித்து ஒன்பது பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வந்த நிலையில் இந்த செய்தியை லைகா நிறுவனம் மறுத்துள்ளது.
பிரான்ஸ் நாட்டு காவல்துறையினர் சோதனை செய்த நிறுவனத்திற்கும் தங்கள் நாட்டு நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அந்நிறுவனம் மறுத்துள்ளது. மேலும் இதுகுறித்து பொய்யான செய்தி வெளியிட்ட ஒரு பிரபல பத்திரிகை மீது அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ‘2.0’ உள்பட தங்களது தயாரிப்பில் உருவாகி வரும் எந்த படத்திற்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும் திட்டமிட்டபடி அனைத்து படங்களின் பணிகளின் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.