shadow

கல்கி குடும்பத்துக்கு ஒருகோடி ரூபாய் கொடுத்த சுபாஷ்கரன்

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தின் நாவலான பொன்னியின் செல்வன் நாவலை எழுதிய கல்கி குடும்பத்திற்கு சுபாஷ்கரன் மற்றும் மணிரத்னம் ஆகிய இருவரும் இணைந்து ஒரு கோடி ரூபாய் காசோலையை கொடுத்துள்ளனர்

கல்கி அறக்கட்டளை இந்த பணத்தை பெற்றுக்கொண்டது. இது குறித்த புகைப்படங்கள் லைகா நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி சுமார் 500 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது