shadow

காவிரி நீர் பிரச்சனை: லண்டனில் 14-ந் தேதி போராடும் தமிழர்கள்

காவிரி பிரச்சனைக்காக தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் போராட்டங்கள் இரவுபகலாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் லண்டனிலும் போராட்டம் வெடித்துள்ளது. அங்குள்ள தமிழர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி வரும் 14ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளனர்

தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை 1-ந் தேதி அதாவது வருகிற 14-ந் தேதி லண்டனில் உள்ள ஈஸ்ட்ஹாம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. லண்டன் நேரப்படி அன்று மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை இப்போராட்டம் நடக்கிறது.

‘காளையை பாய வச்சது நாம்தான். காவிரியை பாய வைக்க வேண்டியதும் நாம் தான். போராட தயாராகு தோழா’ என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை கொண்டு லண்டன் வாழ் தமிழர்கள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply