முதல்வருக்கு மீண்டும் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலெ சிகிச்சை
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை ஏற்கனவே இரண்டு முறை லண்டன் டாக்டர் நேரில் வந்து சிகிச்சை அளித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்தார். மேலும் அடுத்து கொடுக்க வேண்டிய சிகிச்சைகள் குறித்தும் அவர் அப்பல்லோ மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது.
தற்போது முதல்வரது உடல்நலம் சீராக இருப்பதாகவும், தீபாவளிக்கு முன் அவர் டிஸ்சார்ஜ் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் முதல்வருக்கு அப்பல்லோ மருத்துவக் குழு , எம்ய்ஸ் மருத்துவர்கள், லண்டன் மற்றும் சிங்கப்பூர் மருத்துவமனை மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிக்க்சை அளித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.