தமிழகத்தில் ஊரடங்கு திடீர் நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் மார்ச் 31 வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஏப்.14ஆம் தேதி வரை நீட்டிப்பு என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பிரதமர் மோடி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் முதல்வர் பழனிசாமி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவை நேர வரம்பு ஏதுமின்றி நாள் முழுவதும் இயங்கும் என்றும், அனைத்து வகையான கடைகளிலும் மக்கள் 3 அடி இடைவெளிவிட்டு நின்றே பொருள்களை வாங்க வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் ஊபர், ஸ்விக்கி போன்ற ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களுக்கு தடை தொடர்கிறது என தெரிவித்துள்ள தமிழக அரசு, கிராமம், நகரங்களில் தனியார் வங்கிகள் சிறிய நிதி நிறுவனங்கள் பண வசூலை நிறுத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.