இதுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமலே இருந்திருக்கலாம். கேலிக்கூத்தாகும் தேர்தல்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தற்போது இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலைகளில் பல்வேறு மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் பதவிகளை ஏலம் விடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டி என்ற பஞ்சாயத்து தலைவர் பதவியை ஏலம் விடுவதில் நடந்த சண்டையில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

உள்ளாட்சி தேர்தலின்போது உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடக்கூடாது என ஏற்கனவே தேர்தல் ஆணையம் எச்சரித்து இருந்தும், அந்த எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் தொடர்ச்சியாக ஏலம் விட்டுக் கொண்டு தருவது தேர்தலையே கேலிக்கூத்தாக்கி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமலேயே இருந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply