shadow

கோழியை பிடிக்க போன சிறுத்தை அதிர்ச்சியில் மரணம்!

தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் கோழியை பிடிக்கப் போன சிறுத்தை அதிர்ச்சியில் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது

தமிழகத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த வட்டப்பாறை என்ற பகுதியில் உள்ள தேனீர் கடையின் பின்புறம் சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் மரணம் அடைந்தது

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை போது கடையின் பின்புறம் கோழிகூடு ஒன்று இருந்ததாகவும் அந்த கோழியை பிடிக்க சிறுத்தை முயற்சி செய்தபோது கூண்டில் இருந்த கம்பியில் சிக்கிக் கொண்டதாகவும் அந்த அதிர்ச்சியில் சிறுத்தை மரணமடைந்ததாகவும் தெரிந்தது

கோழியை பிடிக்க வந்த சிறுத்தை மரணமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது