shadow

30 நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்யாவிட்டால் சலுகைகள் கட்: மத்திய அரசு அறிவிப்பு

எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் திருமணம் முடிந்த 30 நாட்களுக்குள் திருமணத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என சட்டம் இயற்றுமாறு சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அவ்வாறு திருமணத்தை பதிவு செய்யாதவர்களுக்கு அரசின் சலுகைகளை ரத்து செய்யலாம் என்றும் அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமணம் நடந்த 30 நாட்களுக்குள் பதிவு செய்யாததற்கு, உரிய காரணம் இல்லாத நிலையில், தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளுக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. திருமணத்தை பதிவு செய்யாத தம்பதிகளுக்கு, திருமணச் சான்றிதழ் மூலம் கிடைக்கும் சலுகைகள் ஏதும் வழங்கப்படக் கூடாது எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் திருமணத்தைப் பதிவு செய்வதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். பிறப்பு இறப்பைப் பதிவு செய்வது போன்றே திருமணமும் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் இதன் மூலம் அமலில் உள்ள பல்வேறு திருமணச் சட்டங்கள் தொந்தரவு செய்யப்படாதது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply