shadow

பிளஸ் டூ மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுவையில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக ரங்கசாமி அவர்கள் பொறுப்பேற்றார் என்பதும் அவர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் முதல்வர் ரங்கசாமி அவர்கள் புதுவையில் பிளஸ் டூ மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவித்தார்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்ற முதல்வரின் இந்த அறிவிப்பு புதுவை பள்ளி மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது