shadow

50க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு: ஏற்காடு பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

50க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால் ஏற்காடு பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த சில நாட்களாக ஏற்காடு பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது

இதன் காரணமாக ஏற்காடு – சேலம் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதையை சீரமைக்க ஒரு வாரம் வரை ஆகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜேசிபி, பொக்லைன் இயந்திரம் மூலம் பாறைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.