லாலுவுக்கு சிறை தண்டனை: அதிர்ச்சியில் மரணம் அடைந்த சகோதரி
கால்நடை தீவன வழக்கில் முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் அவர்களுக்கு மூன்றரை ஆண்டு சிறைத்தண்டனனயும், ரூ.5லட்சம் அபராதமும் விதித்து சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை அடுத்து லாலு சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும் லாலுவின் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்து அவரை ஜாமீனில் அழைத்து வர ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவின் ஒரே சகோதாியான கங்கோத்ரி தேவி கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. லாலு பிரசாத் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதும் மன உலைச்சல் ஏற்பட்டு அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்ததாகவும், தண்டனை விவரம் குறித்த விபரங்கள் அவருக்கு தெரிவிக்கப்பட்டது, அதிர்ச்சியில் அவர் மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே சகோதாியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதாற்காக லாலு பிரசாத் இன்று பரோல் கேட்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. து.
Leave a Reply
You must be logged in to post a comment.