பெண் டாக்டரின் பகீர் தகவல்

100க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி அவர்களின் வாழ்வை சீரழித்த நாகர்கோவில் காசி குறித்த திடுக்கிடும் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே

இந்த நிலையில் நாகர்கோவில் பெண் டாக்டர் ஒருவருடன் காசிக்கு நெருக்கமான பழக்கம் இருந்ததாகவும் இதனை அடுத்து அந்த பெண் டாக்டரின் அறிவுறுத்தலின் பெயரில் காசி தனது விந்தணுக்களை தானம் கொடுத்ததாகவும் தெரிகிறது

இதனை அடுத்து நாகர்கோவில் காசியின் விந்தணுக்கள் மூலம் பல பெண்கள் கர்ப்பம் உண்டாகி, தற்போது பல பெண்களின் வயிற்றில் காசியின் குழந்தைகள் வளர்ந்து வருவதாகவும் அந்த பெண் டாக்டர் கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

ஏற்கனவே பள்ளி, கல்லூரி மாணவிகள், குடும்ப பெண்கள், விவிஐபிக்களின் மனைவிகள் என பலர் நாகர்கோவில் காசியிடம் ஏமாந்த தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது பல பெண்களின் வயிற்றில் காசியின் குழந்தை வளர்ந்து வருவதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply