திரையுலகினர் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் காரணமாக தினமும் இந்தியாவில் நூற்றுக்கணக்கில் பலியாகி வரும் நிலையில் நடிகை குஷ்புவின் மும்பை உறவினர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

குஷ்புவின் நெருங்கிய உறவினர் ஒருவர் மும்பையில் வாழ்ந்து வந்ததாகவும், அவர் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்து விட்டதாக தெரிகிறது

இந்த தகவலை தனது டுவிட்டரில் குஷ்பு மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார். இதனை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply