எச்சை ராஜா, முதுகெலும்பு இல்லாத அரசு: வெளுத்து கட்டிய குஷ்பு
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று காலை தனது முகநூலில் பதிவு செய்த பெரியார் சிலை குறித்த கருத்து தமிழகத்தையே கொதிப்படைய செய்தது. ஒட்டுமொத்த அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூகவலைத்தள பயனாளிகளின் எதிர்ப்பு காரணமாக வேறு வழியில்லாமல் எச்.ராஜா தனது சர்ச்சைக்குரிய கருத்தை நீக்கிவிட்டார்.
இருப்பினும் எச்.ராஜாவை சமூக வலைத்தள பயனாளிகள் விடுவதாக இல்லை. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு, எச்.ராஜாவின் பதிவிற்கு காட்டமான பதிலடியை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். எச்.ராஜாவை எச்சை ராஜா என கடுமையாக விமர்சித்த குஷ்பு, அவரை நேரடியாக கண்டிக்க முதுகெலும்பில்லாத அதிமுக அரசு என்று ஆளும் கட்சியையும் அவர் விடவில்லை. மேலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ரஜினி, கமல் பற்றி கருத்து கூறும் அதிமுக அமைச்சர்கள் வாய்மூடி மெளனமாக கோழைகளாக இருப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் எச்.ராஜாவின் இந்த கருத்து அவருடைய சொந்த கருத்து என்று பாஜக ஒதுக்கிவிடாமல் அவரை கட்சியில் இருந்து உடனே நீக்கவேண்டும் என்று நரேந்திரமோடி மற்றும் அமித்ஷாவுக்கு குஷ்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். குஷ்புவின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.