கடந்த 2004ஆம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பலியான கோர சம்பவம் நடந்து இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்று தீ விபத்து நடந்த கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் 10வது ஆண்டு நினைவு இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக சம்மந்தப்பட்ட பள்ளியின் நிறுவனர் பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி உள்பட 24 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
எந்த ஒரு தீவிபத்து வழக்கையும் ஆறு மாத காலங்களுக்குள் முடித்து தீர்ப்பு கொடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தும், பத்து ஆண்டுகளாக இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வருவது அனைவரையும் சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இன்று நினைவு தினம் அனுசரிக்க வந்த பலியான குழந்தைகளின் பெற்றோர்கள் வழக்கை கூடியவிரைவில் முடித்து, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கவேண்டும் என செய்தியாளர்கள் முன்னர் தங்கள் கருத்தை வெளியிட்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.