சென்னை மருத்துவமனையில் அனுமதி
தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் கேபி அன்பழகன், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது
சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவில் கேபி அன்பழகன் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே திமுக எம்.எல்.ஏ அன்பழகன், அதிமுக எம்.எல்.ஏ பழனி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அமைச்சர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.