shadow

காதல் ஜோடிக்கு தடை விதித்த பூங்கா நிர்வாகம்: அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதி

கோவையில் உள்ள தாவரவியல் பூங்கா ஒன்று தாவரவியல் மாணவர்களின் நலனுக்காக நடத்தப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் பொதுமக்களுக்கும் அனுமதி உண்டு என்றாலும் தற்போது அடையாள அட்டை இருந்தால் மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த பூங்காவில் காதலர்களாக வருபவர்கள் சில முறையற்ற செயல்களில் ஈடுபடுவதாக வந்த புகார்களை அடுத்து மாணவ மாணவிகள் ஜோடியாகவோ அல்லது காதலர்களாகவோ வந்தால் பூங்கா நிர்வாகம் அனுமதிப்பதில்லை. தனியாக வரும் மாணவிகளையும் பெற்றோருடன் வருமாறு அறிவுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும் கணவன், மனைவியாக வருபவர்களிடம் கூட தாலி, மெட்டி ஆகியவை சோதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்களும் மாணவ, மாணவிகளும் அதிருப்தியை தெரிவித்திருந்த போதிலும், தற்போது பூங்காவில் முறையற்ற செயல்களில் ஈடுபடும் ஜோடிகள் இல்லை என்றும் இந்த நடவடிக்கை நல்லது என்றும் சில பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply